துரை தயாநிதி எங்கே?.. 'டாப்சி புகழ்' நடிகர் மகத்துக்கு போலீஸ் சம்மன்!

Subscribe to Oneindia Tamil

Durai Dayanidhi and Mahat
மதுரை: கிரானைட் மோசடி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் மறைவிடம் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் மகத்துக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

துரை தயாநிதியின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்காக மதுரை போலீஸார் ஏகப்பட்ட ரூட்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பலரையும் நேரில் அழைத்து விசாரித்துப் பார்த்து விட்டனர். ஒன்றும் தேறவில்லை.

இந்த நிலையில் நடிகர் மகத்துக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த மகத் மங்காத்தா படத்தில் நடித்தவர். நடிகை டாப்சியுடன் நட்பு வைத்துக் கொள்வது தொடர்பான கலாட்டாவில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனுடன் கடும் சண்டையிலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அப்போதே இவர் குறித்தும் ஏகப்பட்ட செய்திகள் உலா வந்தன.

இவரும் துரை தயாநிதியும் நெருங்கிய நண்பர்கள். இந்த அடிப்படையில் மகத்தைப் பிடித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனராம். இது தொடர்பாக மகத்துக்கு சம்மனும் போயுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+