பிரஸ் மீட்டில் கெஜ்ரிவாலை குடைந்தெடுத்த முன்னாள் சகா!

காசியாபாத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை கெஜ்ரிவால் நடத்தினார். அப்போது மும்பையைச் சேர்ந்த அன்னி ஹோக்லி என்ற பெண், கெஜ்ரிவாலின் கொள்கை என்ன? கோட்பாடு என்ன? மகாத்மா காந்தி வழியில் போகிறாரா? அல்லது புரட்சி நடத்துகிறாரா? என்ற கேள்விகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை அந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்தில் விநியோகித்தார். பிரஸ் மீட்டில் அந்தப் பெண் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் கெஜ்ரிவால்.
அவரும் விடுவதாக இல்லை. பிரஸ் மீட் முடிந்து வெளியே வந்த கெஜ்ரிவாலிடம், புரட்சியைப் பற்றி பேசுகிற யாரும் பிரச்சனை வந்தவுடன் ஓடக் கூடாது. ஆனால் நீங்களோ பிரச்சனை வந்தவுடன் ஓடிப்போய்விடுகிறீர்கள்.. சல்மான் குர்ஷித் விவகாரத்தில் மாற்றுத் திறனாளிகளை வைத்துக் கொண்டு போராடினீர்.. முடிவு கிடைக்காமல் போராட்டத்தை முடிக்க மாட்டேன் என்று டெல்லியில் உட்கார்ந்தீர்.. அப்புறம் திடீர்னு ஃபரூக்காபாத் போய் போராடப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறீர்கள்... டெல்லியில் ஆதரவு இருக்கு.. அதனால தலைவராகலம்னு நினைக்கிறீங்க என்று நேருக்கு நேர் முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட்டார். கெஜ்ரிவால் ஆடிப்போய் டெல்லிக்கு வாங்க பேசலாம் என்றார். ஆனால் அந்தப் பெண்ணோ நான் மும்பையிலிருந்து வருகிறேன்.. அங்கெல்லா வர முடியாது என்று சொல்லிவிட்டார்.
எப்படியெல்லாம் கேள்வி கேட்டார் கெஜ்ரிவால்...அவரையே மடக்கி முழிக்க வெச்சுட்டாங்களே!












Click it and Unblock the Notifications