நவ 22ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: 'உஷ்ணத்திற்குப்' பஞ்சமிருக்காது!

நவம்பர் 22 முதல் டிசம்பர் 20 வரை
நாடாளுமன்ற விவகாரத்துக்கான அமைச்சரவை குழு ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் டெல்லியில் வியாழன்று கூடியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் 22ம் தேதி கூட்டுமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நவம்பர் 22 தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத் தொடர் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முடங்கிய மழைக்காலத் தொடர்
மழைக்கால கூட்டத் தொடரில் தினசரி அமளியும், ஒத்திவைப்பும்தான் முக்கிய அம்சமாக இருந்தது. மத்திய அரசு தனியாருக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்ததில் 1,86,000 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டது. இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைகள் முடங்கின.
குளிர்கால கூட்டத் தொடரில் ...
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் விவகாரம்,வதேரா விவகாரம், என குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பிரச்சினையை கிளப்ப நிறைய உள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு
ஏற்கனவே சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கண்டித்து அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய தீர்மானம் கொண்டு வரப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications