டிரான்ஸ்பார்மரில் கார் மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூரிலிருந்து பெங்களூருக்குச் சென்ற கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூரைச் சேர்ந்த 7 பேர் இன்று காலை பெங்களூருக்குக் காரில் புறப்பட்டனர். அவர்கள் பயணித்த கார் நாட்ராம்பள்ளி அருகே போனபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி நின்றது. இதில் காரில் இருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications