ரவடி கோழிபாஸ்கரை கோழியைப் போல் அமுக்கி பிடித்தது சேலம் போலீஸ்
சேலம்: சேலம் சுற்றுவட்டாரத்தில் பிரபல ரவுடியான கோழிபாஸ்கர் போலீசில் சிக்கியுள்ளான்.
சேலம் செல்லக்குட்டி காடு பகுதியைச் சேர்ந்த கோழிபாஸ்கர் மீது மொத்தம் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 4 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவன். இருப்பினும் சிறையில் இருந்து வெளியே வந்தும் தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தான்.
சேலம் அன்னதானப்பட்டி திமுக பிரமுகர் சண்முகம் கடந்த மாதம் கொல்லப்பட்டதில் கோழிபாஸ்கருக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது.
மேலும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் கோகுல் என்பவரை பணத்துக்காகக் கடத்திய வழக்கு, மாமனாரை மிரட்டி ரூ. 10 லட்சம் கேட்ட வழக்கு ஆகியவை நிலுவையில் இருந்தது. இதனால் கோழி பாஸ்கரை தூக்க போலீஸ் முடிவெடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பெங்களூர், திருச்சி, கோவை, திருப்பூர் என இடங்களில் தேடிய போது சேலத்திலேயே கோழிபாஸ்கர் பதுங்கி இருப்பது தற்போது தான் தெரியவந்தது. இந்நிலையில் அன்னதானப்பட்டி மணியனூர் பகுதியில் கோழிபாஸ்கரை கோழி அமுக்குவது போல் போலீசார் பிடித்திருக்கின்றனர். தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் கோழி பாஸ்கர்.












Click it and Unblock the Notifications