சென்னையில் கடல் சீற்றம், பல இடங்களில் கன மழை, பலத்த காற்றில் மரங்கள் முறிந்து விழுந்தன

Subscribe to Oneindia Tamil

Nilam Effect
சென்னை: சென்னையில் நிலம் புயல் எதிரொலியாக பல இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தவண்ணம் இருக்கிறது. இரவில் வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

நிலம் புயல் சென்னையை வேகமாக நெருங்கி வருகிறது. நேற்று 550 கிலோமீட்டர் தொலைவில் இருந்த புயல் இன்று மேலும் 300 கிலோமீட்டர் தூரம் வரை நகர்ந்து வந்து விட்டது. இன்று மாலை புயல் கரையைக் கடக்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் புயல் நெருங்கி வருவதால், சென்னையில் பலத்த காற்றும், கன மழையும் நீடித்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய நகரின் பல பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகள் பலவற்றிலும் தொடர்ந்து கன மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது.

திருவொற்றியூர், எண்ணூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலும் கன மழைக் கொட்டித் தீர்த்தது.

பலத்த காற்று காரணமாக அடையார், மயிலாப்பூர், சாந்தோம் உள்ளிட்ட பகுதிளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை பல்துறை ஊழியர்கள் சேர்ந்து அகற்றி நிலைமையைச் சரி செய்ய முயன்றனர்.

கடல் நேற்று முதல் தொடர்ந்து கொந்தளிப்பாக உள்ளது. இதனால் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் மீனவர்கள் தங்களது படகுகள், விசைப்படகுகள், வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+