ரூ1,600 கோடி மோசடி புகார்: மிரட்டும் ராகுல்- சவால் விடும் சு.சுவாமி

புகார் என்ன?
சோனியாவும் ராகுலும் பங்குதாரர்களாக உள்ள நிறுவனத்தின் பெயர் யங் இந்தியா. இந்த தனியார் நிறுவனமானது அசோசியேட்டட் ஜேர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தியிருக்கிறது. இப்பொது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ1,600 கோடி என்றும் சோனியா- ராகுல் காந்தி உரிமையாளர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சியே கடன் கொடுத்திருக்கிறது என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். மேலும் அசோசியேட்டட் ஜேர்னல் லிமிடெட் நிறுவனத்தில் இறந்து போன ஜவஹர்லால் நேரு, பெரோஸ் காந்தி, இந்திரா காந்தி, ஜே.டி.பிர்லா ஆகியோர் இன்னமும் பங்குதாரர்களாக நீடிப்பதாகவும் அதன் தலைவராக காங்கிரஸ் பொருளாளர் வோரா இருப்பதால் இந்த முறைகேட்டில் சோனியா ஈடுபட்டிருக்கிறார் என்றும் சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்திருந்தார்.
ராகுல் மறுப்பு
ஆனால் இப்புகாரை காங்கிரஸ் பொதுச்செயலாளரும் சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி நிரகரித்துள்ளார், இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
சுவாமி விடுவதாக இல்லை
ஆனால் ராகுல் காந்தி தரப்பில் இருந்து தமக்கு எந்த ஒரு நோட்டீஸும் வரவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் என் மீது வழக்குத் தொடரட்டும். வழக்கை நான் சந்திக்க தயாராக இருக்கிறோம். நாம் நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று சவால் விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications