ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர் 43 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 43 பேரை இலங்கைக் கடற்படை நேற்று கைது செய்துள்ளது.
இலங்கையின் புத்தளம் கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிப் படகில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு படகை இலங்கை கடற்படை வழிமறித்து பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்குக் கொண்டு வந்தது. அப்படகில் இருந்த 43 பேரும் கைது செய்யப்பட்டனர். 7 படகோட்டிகள் தப்பிச்சென்றுவிட்டனர்.க்
கைது செய்யப்பட்டோரிடம் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற 26 பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதியிலிருந்து இதுவரை மொத்தம் 116 இலங்கை நாட்டவர் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications