டெங்கு காய்ச்சல்: 25 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!
கடலூர்: டெங்கு காய்ச்சல் தாக்கிய 25 பேருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தினமும் தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கடலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மனோகரன் கூறியதாவது,
கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கொசு வலைகள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 25 பேர் தனி பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் உடல் நலம் தேறி வருகின்றனர். டெங்கு காய்ச்சல் கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. சந்தேகம் கொண்டவர்கள் உடனடியாக அரசு மருத்துவமழைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications