டெல்லி தரும் உபரி மின்சாரத்தை தமிழகத்திற்குத் தர முடியாது: மத்திய அரசு கைவிரிப்பு

டெல்லி மாநில அரசு, உபரியாக ஒப்படைக்கவுள்ள மின்சாரத்தை, தமிழகத்துக்கு வழங்க வேண்டுமென, முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
ஆனால் மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தமிழகத்திற்கு உபரி மின்சாரத்தை வழங்குவது சாத்தியமில்லை, என, மத்திய மின் துறை இணை அமைச்சர் வேணுகோபால் தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய மின்சார சட்டம் பிரிவு (37/38) கீழ் உபரி மின்சாரம் இருக்கும் ஒரு மாநிலம், மின்பற்றாக்குறையில் தவிக்கும் மாநிலத்துக்கு மின்சாரம் வழங்கும் அடிப்படையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் தலைமை செயலாளர் சார்பில் கடந்த மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், உபரி மின்சாரத்தை டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு எடுத்துச் செல்வதில் சிக்கல்கள் இருப்பதாக நீதிபதிகள் முன்பு தெரிவித்தார்.
அட்டர்னி ஜெனரலின் பதிலைக் கேட்ட நீதிபதிகள் இது குறித்து மத்திய அரசு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யவேண்டும். டெல்லி அரசு ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குவதில் உள்ள சிக்கல் பற்றி அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மத்திய அரசு தனது அறிக்கையை 26ம் தேதி தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இதனையடுத்து வரும் 29 ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications