ரவுடிகளுடன் சமாதானம் என்ற பேச்சுக்கு இடமில்லை: ‘என்கவுண்டர்’ வெள்ளைத்துரை

மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தியில் சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் ரவுடிக்கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த பகுதியில் ரவுடிகள் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.
எல்லாமே புதுசுதான்
இந்த நிலையில் அண்ணா நகர் சரக உதவி ஆணையாளராக இருந்த வெள்ளைத்துரை மானாமதுரை டி.எஸ்.பியாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக ஆய்வு மேற்கொண்ட அவர் மானாமதுரை காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த பழைய காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்துவிட்டு புதிய ஆட்களை நியமித்தார். டிரைவர் உள்ளிட்ட அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்றிய மதுரையில் பயன்படுத்தி வந்த வாகனத்தைதான் பயன்படுத்தி வருகிறார்.
சமாதானமே கிடையாது
இதன் பின்னர் நம்மிடம் பேசிய அவர், ரவுடிகளுடன் எவ்வித சமாதானமும் கிடையாது என்றார். அமைதியான முறையில் கையாளுவதை விட அடிதடி முறைதான் ரவுடிகளை அடக்க உதவும் என்றும் கூறினார். டி.எஸ்.பி வெள்ளைத்துரையின் இந்த பேச்சு ரவுடிகளுக்கு நிச்சயம் அச்சத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்
சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய அதிரடிப்படை குழுவில் இடம் பெற்றிருந்த வெள்ளைத்துரைதான் வீரப்பனை சுட்டுக் கொன்றவர். இதன் மூலம் இவருக்கு இரட்டை பதவி உயர்வை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா வழங்கினார். இதன் மூலம் சப் இன்ஸ்பெக்டராக இருந்த வெள்ளைத்துரை, டி.எஸ்.பி. ஆனார்.
வீரப்பன் வேட்டையில் மட்டுமல்லாமல், சென்னையைக் கலக்கி வந்த அயோத்தியா குப்பம் வீரமணியையும் நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி என்கவுண்டர் செய்தவர் வெள்ளைத்துரை.
மதுரை டூ மானாமதுரை
கடந்த மதுரையில் அண்ணா நகர் சரக உதவி ஆணையாளராக வெள்ளைத்துரை நியமிட்ட வெள்ளத்துரை இப்போது மானாமதுரை டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளதால் விரைவில் இங்கு ரவுடிகள் வேட்டை தொடங்கும் என்றும் கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோர் வேட்டையாடப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications