என்ன பேச்சு இது, திக்விஜய் சிங் மீது கேஸ் போடுவேன்.. ராக்கி சாவந்த்
Subscribe to Oneindia Tamil

ராக்கி சாவந்த்தும், கெஜ்ரிவாலும் ஒன்றுதான். ஒன்றுமே இல்லாமல் ஏதோ இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசியிருந்தார் திக்விஜய் சிங். இதற்கு ராக்கி சாவந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்ன பேச்சு இது. நான் என் வக்கீலுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். விரைவில் திக்விஜய் சிங்கை கோர்ட்டுக்கு இழுப்பேன். கண்டிப்பாக செய்வேன். அவதூறு கேஸ் போடப் போகிறேன். அரசியலில் ஈடுபடுவதை விட்டு விட்டு ஏன்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்களோ தெரியவில்லை. நான் கோர்ட்டுக்குப் போகும்போது திக்விஜய் சிங்குக்குத் தெரியும், நான் யார் என்று என்றார் கோபமாக.












Click it and Unblock the Notifications