இன்று பெருகும் இன்பம் என்றும் நிலைக்கட்டும் - ஜெ. தீபாவளி வாழ்த்து

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை உவகையுடனும் உற்சாகத்துடனும் அனைத்து மக்களும் கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நரகாசுரன் எனும் கொடிய அரக்கன் தனது கொடுஞ்செயல்களால் மக்களையும், தேவர்களையும் பெருந்துன்பத்திற்கு ஆளாக்கினான். அக்கொடியவனை திருமால் அழித்த தினமே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.
தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்நன்னாளில், மக்கள் புத்தாடைகளை அணிந்து, இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இனிப்புகளை பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்தத் தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தித்திக்கும் இத்தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்தி, அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஆளுநர் ரோசய்யா
தமிழக ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
மகிழ்ச்சிகரமான இந்த தீபாவளி திருநாளில் தமிழக மக்களுக்கு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு இதய பூர்வமான வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தீபத்திருநாள், நமக்கு அதிகமான அறிவாற்றலையும் வழங்கி, வளர்ச்சி மற்றும் மேன்மையை அளிக்கட்டும். அறியாமை எனும் இருள் அகற்றி, ஒற்றுமை, அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்தி, நமது நாட்டை உச்சத்துக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும்.
காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்
மனித சமுதாயத்தில் ஆணவமும், அகங்காரமும் ஒழிய வேண்டும். ஆனந்தமும், சாந்தமும் நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் பண்டிகை தீபாவளி.
இந்தியாவில் கொண்டாடப்படுகிற எந்த விழாவிற்கும் ஒரு காரணமும், ஒரு ஆழ்ந்த உண்மையும் இருக்கும். இந்த விழா கொண்டாடுகிற இந்த தருணத்தில் அதர்மம் ஒழிந்து, ஆதிக்க உணர்வு மறைந்து, ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட்டு எல்லோரும் மகிழ்ந்திடும் ஒரு விழாவாக இவ்விழா அமைய வேண்டும் என்று இன்நன்னாளில் வாழ்த்துகிறேன்.
பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்:
அசுரர் குலத்து நரகாசுரனை வதைத்து தர்மத்தை காத்தான் கண்ணன். நம் தாயகத்தையும், தமிழகத்தையும் காக்க கண்ணனின் வழியில் உறுதி ஏற்போம். நம் பொது வாழ்விலும் தனி வாழ்விலும் தன்னி கரில்லாத தூயவராய் திகழ்வோம். நாட்டை வாட்டும் அல்லல்களை அகற்ற அப்பழுக்கற்ற தேச பக்தராய் தன்னலம் கருதாது உழைப்போம்.
ஜாதி, மத பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் லஞ்ச ஊழல் சிறிதுமற்ற நல்லவர்கள் தலைமை ஏற்கவும் இத்தீபா வளித் திருநாளில் உறுதி யேற்போம். தீப ஒளியை நம் வீட்டில் ஏற்றுவது போல் நம் நாடு தீபமாய் ஒளிர நாம் நம்மை அர்ப்பணிப்போம். அனைவருக்கும் அன்பு தீபாவளி வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications