ஆவுடையப்பன் முகத்தில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி அமுதா
திருச்செந்தூர்: குடும்பத் தகராறில் கடுப்பான பெண், தனது கணவர் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை எடுத்து ஊற்றி விட்டார்.
திருச்செந்தூரை அடுத்த ஆத்தூர் குட்டிகாட்டை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
ஆவுடையப்பனும், அமுதாவும் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்படும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோல் கணவன்-மனைவி-இடையே இதுபோல் பிரச்சனை வெடித்தது. அப்போது அமுதாவை ஆவுடையப்பன் திட்டினார். இதுபற்றி தெரிய வந்ததும் உறவினர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இருந்தாலும் இருவருக்கும் இடையே பிரச்சனை நீறுபூத்த நெருப்பு போல அணையாமல் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு ஆவுடையப்பன் தூங்க சென்ற பிறகு அமுதா திடீரென வீட்டின் சமையல் அறையில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து ஆவுடையப்பன் முகத்தில் கொட்டினார். இதில் அவரது முகம் வெந்தது.
வலியால் அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அமுதா வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டார். இதற்கிடையே வலியால் துடித்துகொண்டிருந்த ஆவுடையப்பனை அக்கம்பக்கத்தினர் சேர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து ஆத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரி வழககு பதிவு செய்து தலைமறைவான அமுதாவை தேடி வருகிறார்.












Click it and Unblock the Notifications