விமான நிலையத்தில் ப.சியை போட்டோ எடுக்க முயன்றவர் கைது-ஏற்கனவே விமானத்தை படம் பிடித்தவர்!

Subscribe to Oneindia Tamil

P Chidambaram
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் புகைப்படம் எடுத்த கேரள நபரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இவர் ஏற்கனவே ட்ரீம்லைனர் விமானத்தைப் படம் எடுத்து சிக்கியவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தார் ப.சிதம்பரம். அப்போது விமான நிலைய வாசலில் ஒரு நபர் அவரை புகைப்படம் எடுத்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அப்போது அந்த நபரின் பெயர் அமீர் என்றும், கொச்சியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இவரிடம் டெல்லி செல்வதற்கான விமான டிக்கெட் இருந்தது.

இதே அமீர்தான் அக்டோபர் 3ம் தேதி சென்னையிலிருந்து டெல்லி கிளம்பிய ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தின் உள்ளே புகைப்படம் எடுத்து சிக்கியவர். அவரும், மன்சூர் என்பவரும் தங்களது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்தபோது சக பயணிகளால் பிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விமானத்தின் அழகை படம் எடுத்ததாக கூறியதைத் தொடர்ந்து இருவரையும் விமானத்திலிருந்து இறக்கி விட்டனர் அதிகாரிகள்.

பின்னர் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கேரள போலீஸாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் அமீர் மீண்டும் புகைப்படம் எடுத்து சிக்கலில் மாட்டியுள்ளார். இந்த முறை அமீரின் நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடத்த போலீஸார் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

கைதான அமீர் என்டிஏ (தேசிய ஜனநாயக அமைப்பு) அமைப்பைச் சேர்ந்தவர் ஆவார். இது கேராளாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+