இலங்கை ராணுவத்தில் தமிழ் பெண்கள் சேர்ப்பு- கிளிநொச்சியில் முகாம்!
கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியில் தமிழ்ப் பெண்களை முதல் முறையாக இலங்கை ராணுவத்தில் சேர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இலங்கை ராணுவத்தில் சிங்களவரே பெரும்பான்மையினராக இருக்கின்றனர். இந்நிலையில் இலங்கை யுத்தம் முடிந்த பிறகு கடந்த ஆண்டு சுமார் 1000 தமிழர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 18 முதல் 22 வயது வரையிலான இளம் தமிழ் பெண்களை இலங்கை ராணுவத்தில் சேர்க்க அந்நாட்டு ராணுவம் முடிவு செய்திருக்கிறது.
இதற்கான ஆட்சேர்ப்பு முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகராக இருந்த கிளிநொச்சி அருகே பாரதிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள ராணுவத்தினரே நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் தமிழ் பேசும் ராணுவத்தினரை நிறுத்துவதன் மூலம் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது இலங்கை அரசு என்கின்றனர் தமிழ் அரசியல்வாதிகள்.












Click it and Unblock the Notifications