வாச்சாத்தி மலைவாழ் மக்கள் மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து: உயர்நீதிமன்றம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரை தாக்கி கொல்ல முயன்றதாக மலைவாழ் மக்கள் மீது போடப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மலைவாழ்மக்கள் மீதான குற்றப்பத்திரிக்கையையும் ரத்து செய்து கோர்ட் உத்தரவிட்டது.
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி சந்தன மரங்கள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினரும், போலீசாரும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மலைவாழ் மக்களை போலீசார் கடுமையாக தாக்கியதுடன், பெண்களை பலாத்காரம் செய்யதனர். ஆனால் சந்தன மரங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதுதொடர்பான வழக்கு 19 ஆண்டுகள் நடந்தது. விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை மற்றும் வனத்துறையைச் சேர்ந்த 215 பேருக்கும் உரிய தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த தீர்ப்புக்கு மலைவாழ்மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். காலம் கடந்தாகிலும் தங்களுக்கு நியாயம் கிடைத்தது என கூறினர்.
இந்த நிலையில் போலீசாரை தாக்கியதாகவும், வனத்துறை அதிகாரிகளை தாக்கி கொல்ல முயன்றதாகவும் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 98 பெண்கள் உள்பட 105 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் மீது அரூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், தங்கள் மீதான வழக்கில் முகாந்திரம் இல்லை என்றும், எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாச்சாத்தி பெண்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் அலி, மலைவாழ் மக்கள் மீதான வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி அதனை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் அரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையையும் ரத்து செய்தார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications