கூடங்குளத்தில் டிச.15-ல் மின் உற்பத்தி- மன்மோகன் -புதின் இணைந்து தொடங்கி வைக்க திட்டம்?
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, கூடங்குளம் முதலாவது அணுஉலையில் யுரேனியம் நிரப்பப்பட்டு சோதனை பணிகள் நடந்து வருகின்றன. இப் பணிகள் 10 நாட்களில் முடிந்து விடும். அனேகமாக டிசம்பர் 15-ந்தேதி மின்உற்பத்தி முறைப்படி தொடங்கப்படும். இதில் உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின்சாரத்தில் குறிப்பிட்ட அளவு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது என்றார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷியா உதவியுடன் கட்டப்பட்டு இருப்பதால் ரஷிய அதிபர் புதினை வைத்து திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்தபடி பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் புதின் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறந்து வைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications