குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் 3 வழக்குகளில் பி.ஆர்.பி.க்கு ஜாமீன்

அரசு புறம்போக்கு நிலங்கள், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பாசன கண்மாய்கள் மற்றும் கால்வாய்களை ஆக்கிரமித்து கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததற்காக பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மீது போலீசார் 35 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் பழனிச்சாமியை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். ஆனால் இந்த வழக்குளில் தொடர்புடைய பி.ஆர்.பி.யின் மகன்கள் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில் பி.ஆர்.பி.யின் ஜாமீன் மனு மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது வழக்கறிஞர் கூறுகையில், சி.சி.கண்மாய் ஆக்கிரமிப்பு, சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்தது மற்றும் தாமரைப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு தொடர்பாக பழனிச்சாமி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் அவருக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெய்குமார், பி.ஆர். பழனிச்சாமிக்கு இந்த 3 வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதாவது அவர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று கீழவளவு, மேலூர், ஒத்தக்கடை மற்றும் மேலவளவு ஆகிய காவல் நிலையங்களில் பதிவான 15 வழக்குகளில் ஜாமீன் கோரிய பழனிச்சாமியின் மனுக்களை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெய்குமார், அதில் 12 வழக்குகள் தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தார். மேலும் கவட்டையன்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் நில மோசடி குறித்து மேலவளவு போலீசார் பதிவு செய்த வழக்கு மற்றும் மேலூர் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் 19ம் தேதி நீதி்மன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்












Click it and Unblock the Notifications