எகிப்தில் ரயிலுடன் மோதிய பள்ளிப் பேருந்து: 50 சிறுவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே பள்ளிப் பேருந்து ரயிலுடன் மோதியதில் 50 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கெய்ரோவின் தென் பகுதியான அஷியுத் என்ற இடத்தில் ரயில் பாதையை கடக்க முயன்ற போது பள்ளிப் பேருந்து ரயிலுடன் மோதியது. இதில் பேருந்து சுக்கு நூறாக நொறுங்கியது. பள்ளி பேருந்தில் இருந்த குழந்தைகள் 50 பேர் அப்படியே உருக்குலைந்து உயிரிழந்து போயினர்.
ரயில் பாதையின் கதவை மூடாமல் ஊழியர்கள் கவனக் குறைவாக இருந்ததால்தான் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து உயிரிழந்த குழநதைகளின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்து நடைபெற்ற இடத்தை எகிப்து பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications