இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில் ஏடாகூடமாய் சிக்கியக் கொண்ட கிம் கர்தஷியன்!

கிம் கர்தஷியனை ட்விட்டரில் பாலோ செய்கிறவர்கள் எண்ணிக்கை 17 மில்லியன்.. சில நாட்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட்டதைக் குறிப்பிட்டு "இஸ்ரேலில் வாழ்கிற ஒவ்வொருவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்" என்று போட்டுவிட்டார். ஆனால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது பாலஸ்தீன்... இதனால் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாளர்கள் கண்டன ட்விட்டுகளை தட்டிவிட ஆடிப் போய்விட்டார் கிம்! இன்னும் சில ட்விட்டுகள் ‘கொலை மிரட்டல்'களாக வந்து குவிந்திருக்கின்றன!
வேறுவழியின்றி முந்தைய ட்விட்டை டெலீட் செய்துவிட்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்காக பிரார்த்திருக்கிறேன் என்று மீண்டும் எழுதிப் போட்டிருக்கிறார். ஆனாலும் சர்ச்சை ஓய்ந்த பாடில்லை. வேறுவழியில்லாமல் இரண்டு ட்விட்டுகளையுமே நீக்கிவிட்டு தமது இணையதளம் வழியாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தமது கருத்துகள் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டிருப்பதுடன் இஸ்ரேல்- பாலஸ்தீனம் மட்டுமல்ல... உலகெங்கும் யுத்தப் பகுதிகளில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்கள் அனைவருக்குமாக பிரார்த்திக்கிறேன் என்று ஒரேயடியாக அறிக்கைவிட்டுவிட்டார்!
ஒருவழியாக ‘அலைகள் ஓய்ந்திருக்கின்றன'....












Click it and Unblock the Notifications