For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் தீ விபத்து: 5 கடைகள் நாசம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ராயபேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கடைகள், தியேட்டர்கள் மூடப்பட்டன.

சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் உள்ளது. அந்த வளாகத்தின் முதல் மாடியில் உள்ள மெட்ரோ செருப்புக் கடையில் இன்று காலை திடீர் என்று தீ பிடித்தது. இது குறித்து உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. இதில் 5 கடைகளும் தீக்கிரையாகின.

இதற்கிடையே அங்குள்ள கடைகள், தியேட்டர்கள் மூடப்பட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். 4 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தன.

இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Fire broke out at a shop in the Express Avenue mall in Royapettah on friday. 4 fire tenders rushed to the spot and doused the flames after one hour struggle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X