காவிரி நதிநீர் வழக்கு: தமிழகம்- கர்நாடகா முதல்வர்கள் பேச்சுவார்த்த சுப்ரீம் கோர்ட் அறிவுரை
Subscribe to Oneindia Tamil

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கோரி தமிழக அரசு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அம்மனுவில் நடப்பு சம்பா சாகுபடிக்கான தண்ணீரை உடனே கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடவும் வலியுறுத்தப்பட்டது.
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளுடன் சேர்த்து இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் டிகே ஜெயின் மற்றும் லோகுர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், விவசாயிகளின் நலன் கருதி, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தையிலாவது தீர்வு வருமா?












Click it and Unblock the Notifications