இலங்கை பார்லி. கேண்டீன் உணவில் 'சயனைட்' விஷம்... விசாரணை தொடர்கிறது
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கிழங்கு உணவில் "சயனைட்" விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உணவில் "சயனைட்"விஷம் எப்படி கலந்திருக்கலாம் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கை நாடாளுமன்ற கேண்டீனில் கடந்த 16-ந் தேதி கிழங்கு சேர்க்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. ஆனால் அந்தக் கிழங்கு வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறமாக இருந்தது, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த கேண்டீனில் இருந்த அனைத்து கிழங்குகளும் ஆய்வுக்கு அனுப்பி வைக்க சபாநாயகர் உத்தரவிட்டார். தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதில் கிழங்கில் சயனைட் விஷம் கலந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சயனைட் விஷமானது எப்படி பச்சையான கிழங்குகளில் கலந்திருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.











Click it and Unblock the Notifications