நிவாரணம் கொடுக்க கப்பலை விற்க வேண்டும்: 'பிரதிபா காவிரி" வழக்கில் திருப்பம்
Subscribe to Oneindia Tamil

நிலம் புயல் காரணமாக அக்டோபர் 31-ந் தேதி சென்னை கடற்பரப்பில் பிரதிபா காவிரி என்ற கப்பல் தரைதட்டியது. அப்போது கப்பலில் இருந்த பணியாளர்கள் உயிர் தப்பிக்க படகில் ஏறினர். ஆனால் படகு கவிழ்ந்து 6 பேர் பலியாகினர்.
உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினர் சார்பில் கப்பல் நிர்வாகத்திடம் நிவாரணம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்த கப்பல் நிர்வாகமோ, கப்பலை விற்றுத்தான் நிவாரணம் வழங்க முடியும் என்று கூறியிருக்கிறது. இதைத் தொடந்து கப்பலை விற்பதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கப்பலை விற்க அனுமதி கோரி தனியே மனுத்தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது












Click it and Unblock the Notifications