For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வை சந்திக்க போயஸ் கார்டன் சென்ற மாற்றுத் திறனாளிகள் கூண்டோடு கைது

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க போயஸ் கார்டனுக்கு சென்ற மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத் திறனாளிகள் கடந்த 4 நாட்களாக சென்னையில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க முடிவு செய்தனர். இதையடுத்து ஏராளமான மாற்றுத் திறனாளிகள் நேராக போயஸ் கார்டனுக்கு கிளம்பினர்.

ஆனால் அவர்களை வழியிலேயே மடக்கிய போலீசார் அனைவரையும் கைது செய்தனர். மேலும் இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4 நாட்களாக வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.

English summary
Police arrested differently abled persons while they were on their way to Poes garden to meet CM Jayalalithaa. They wanted to inform the CM about their demands including preference in job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X