ஜெ.வை சந்திக்க போயஸ் கார்டன் சென்ற மாற்றுத் திறனாளிகள் கூண்டோடு கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க போயஸ் கார்டனுக்கு சென்ற மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத் திறனாளிகள் கடந்த 4 நாட்களாக சென்னையில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க முடிவு செய்தனர். இதையடுத்து ஏராளமான மாற்றுத் திறனாளிகள் நேராக போயஸ் கார்டனுக்கு கிளம்பினர்.
ஆனால் அவர்களை வழியிலேயே மடக்கிய போலீசார் அனைவரையும் கைது செய்தனர். மேலும் இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4 நாட்களாக வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications