ஹைக்கூ எழுதுவீங்களா? அப்போ இந்தப் போட்டியில பங்கேற்கலாமே
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஹைக்கூ போட்டி நடத்தப்படுகிறது.
தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஹைக்கூ கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் கவிஞர்கள் இயற்கை சார்ந்த 3 ஹைக்கூ கவிதைகளை வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதிக்குள் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி, செல்போன் எண்ணையும் மறக்காமல் குறிப்பிட்டு கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
கவிஞர் சுடர் முருகையா,
பி3/ பிளாக் 59, ஜீவன் பீமா நகர், (சென்னை பப்ளிக் ஸ்கூல் எதிரில்)
அண்ணாநகர் மேற்கு விரிவு
சென்னை- 600 101.
தொடர்பு எண் :- 99400 60707
சிறந்த கவிதைக்கு ரூ.5,000 பரிசு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications