தூத்துக்குடி ஏர்போர்ட் விரிவாக்கம்: தமிழக அரசு நிலத்தை ஒதுக்கவில்லை-கனிமொழி கேள்விக்கு அமைச்சர் பதில
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் ஏன் தாமதமாகிறது என்று திமுக எம்.பி. கனிமொழி இன்று ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு விமானப் போக்குவரத்து துறை துணை அமைச்சர் கே.சி. வேணுகோபால் அளித்த பதில் வருமாறு,
தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்துவது குறித்து விமானப் போக்குவரத்து ஆணையம் விரிவான வரைவுத் திட்டத்தை தயாரித்தது. அதன் பிறகு விரிவாக்கத்திற்கு 586 ஏக்கர் நிலம் வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு 586 ஏக்கர் நிலம் வழங்க ஒப்பளிப்பு செய்து கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி இது குறித்த அரசாணையை வெளியிட்டது.
அரசாணை வெளியிடப்பட்டதே தவிர அதன்படி இதுவரை விமானப் போக்குவரத்து ஆணையத்தின் வசம் நிலம் ஒப்படைக்கப்படவில்லை. அதனால் தான் இந்த தாமதம் என்றார்.












Click it and Unblock the Notifications