கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது

காவிரியில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஒருநாள் தாமதமாக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி நீரைத் திறந்துவிட்டது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா வருத்தமும் தெரிவித்தது.
இந்த நீர் நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்ததா? இல்லையா? என்று சர்ச்சை இருந்து வந்தது. நேற்று காலையே பிலிகுண்டுவை வந்தடைந்தது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் நேற்று இரவு 6 மணிக்கு பிலிகுண்டுவுக்கு வந்து சேர்ந்தது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். பின்னர் நேற்று இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது.
காவிரியில் கர்நாடகா திறந்த நீரை ஆய்வு செய்வதற்காக மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்கள், நேற்று காலை முதல் பிலிகுண்டுவில் முகாமிட்டிருந்தனர். கர்நாடகா திறந்த நீர், நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நிலையில் நீடிக்கும் என எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications