மேலும் 8 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 8 பேரை நடுக்கடலில் இலங்கை கடற்படை நேற்று கைது செய்திருக்கிறது.
அண்மையில் பாக்ஜலசந்தி கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 34 பேரை, இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது செய்ததாக இலங்கை கடற்படை அறிவித்தது. இந்த 34 மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை கோரி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று நள்ளிரவு இந்த மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்திருக்கின்றனர். தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி மீன்களைக் கடலில் கொட்டி, மீன் வலைகளை அறித்து எறிந்திருக்கின்றனர்.
மேலு 8 பேரை கைது செய்து இலங்கைக்குக் கொண்டு சென்றிருப்பதாக இன்று காலை கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications