பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்ய முடியாது; ராஜிவ் சுக்லா

இந்தியா வந்திருந்த பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்ததுடன் மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையான ஹபீஸ் சையத்தை கைது செய்திருக்கிறோம் என்று கப்சா விட்டும் சென்றார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ரஹ்மான் மாலிக் பொய்பேச்சு குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே விளக்கமும் கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடான கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் பாஜகவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் பாகிச்தான் அணியின் இந்திய சுற்று பயணத்துக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. விளையாட்டில் அரசியலை கலக்க வேண்டாம் என்று இந்திய கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகியும் ஐபிஎல் தலைவருமான ராஜிவ் சுக்லா தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications