928 கொலைகள்! 768 கொள்ளைகள்!476 செயின் பறிப்புகள்!காரணம் மின்வெட்டு: கருணாநிதி

சென்னையில் மின்வெட்டைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாநிதி, தமிழ்நாட்டிலே எப்படிப்பட்ட அளவிலே ஜெயலலிதா சொன்னதைப் போல கடந்த காலத்திலே ஒரு 18 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த ஆட்சியினால் சட்டம், ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது என்பதை நான் பட்டியலிட்டு உங்களிடத்திலே படித்து காட்ட விரும்புகிறேன். இவர்கள் பதவியேற்றது 2011 மே திங்கள். அந்த மே மாதம் முதல் இதுவரையிலே தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கின்ற கொலைகள் மாத்திரம் 928. கொள்ளைகள் - 768 செயின் பறிப்புகள் - 476. வழிப்பறி மோசடிகள் - 480 இப்படிப்பட்ட ஆட்சிதான், அருமையான, அற்புதமான அனைவரும் பாராட்டத்தக்க, அகில இந்தியாவில் எங்குமில்லாத அமைதியான ஆட்சி என்று ஜெயலலிதா முழங்கியிருக்கிறார்.
கள்வர்கள் கைவரிசைக்கு வழி
இந்த புள்ளிவிவரத்தை அவர்களுக்கு யாராவது காட்டினால் அல்லது அவரே படித்துப்பார்த்தால், எவ்வளவு பெரிய பொய்யை இந்த நாட்டிற்கு அறிவித்திருக்கிறார் என்பதை அவரே உணர்ந்து வருந்தக் கூடுமென்று நான் கருதுகிறேன். அதாவது சங்கிலி அறுப்பது மாத்திரம் 476. அதாவது 476 பெண்களுடைய கழுத்திலே உள்ள சங்கிலிகளை கயவர்கள் அறுத்திருக்கிறார்கள் என்றால், அதற்கு ஒரு பெண் முதல் அமைச்சரும் தமிழ்நாட்டிலே உள்ள மின் விளக்குகளையெல்லாம் அணைத்து, இருளில் கள்வர்கள் கைவரிசையைக் காட்டுவதற்கு வழி வகுத்திருக்கிறார் என்றால் இந்த அவமானத்தை, இந்த அக்கிரமத்தை எங்கே போய்ச் சொல்வது என்பதை தயவுசெய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நேர்மையற்ற அரசு
வள்ளுவர் மிக அழகாகச் சொன்னார், தானாகவே ஒரு அரசு அழிந்து விட வேண்டுமேயானால், அது பிறர் சொல்வதைக் கேட்காத அரசாக, எதிரிகளுடைய வாக்குகளை ஏற்க முடியாது என்கின்ற அகம்பாவம் கொண்ட அரசாக இருக்குமேயானால், அந்த அரசு, கெடுப்பதற்கு யாரும் இல்லாமலேயே தானாகவே அழிந்து விடும் என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார். அதை மனதிலே கொண்டு இந்த ஆட்சி தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்பதற்காகத் தான், சொல்வதற்காகத் தான் இன்றையதினம் இந்த ஆர்ப்பாட்டம். மேலும், மின் பிரச்சினைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் பதில் மனுவிலே கூறப்பட்டுள்ளவைகளையெல்லாம் நீதி மன்றம் கண்காணிக்கும் என்றும், அதற்காக 8 வார காலம் ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த 8 வாரத்திற்குப் பிறகு மீண்டும் விசாரித்து தீர்ப்பு சொல்லப்படும் என்று நீதிபதிகள் இக்பால் அவர்களும், சிவஞானம் அவர்களும் நேற்று சொல்லியிருக்கிறார்கள் என்றால் நீதிமன்றம் வரையிலே போய், அரசின் நேர்மை எந்த அளவிற்கு இருக்கிறது, எந்த அளவிற்கு இன்றைக்கு தமிழ்நாட்டிலே நேர்மையற்ற, நெறியற்ற, ஒரு அரசு நடைபெறுகிறதோ என்பதைப் பற்றி சந்தேகப்படுகின்ற அளவிலே தான் நிலைை இருக்கிறது என்பதற்காகத் தான் இந்தச் செய்தியை நான் உங்களுக்குத் தெரிவித்தேன்.
பொய் வழக்கு
எதிர்க்கட்சிகள் மீது வரவேற்புத் தட்டிகளுக்கும், வால்போஸ்டர்களுக்கும் செக்ஷன்களைக் குறிப்பிட்டு வழக்குகளைப் போடுகின்ற அளவிற்கு இந்த அரசு மாறியிருக்கின்றது. எதிர்க்கட்சிகள் மீது பல பொய்யான வழக்குகளைத் தொடருவதை இந்த அளவோடு நிறுத்துங்கள். பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற நிலைமைக்கு எங்களையெல்லாம் ஆளாக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டு, அறப்போர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்த தொண்டர்களுக்கு நன்றி என்றார் அவர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications