கேரள எல்லையில் ரூ.50 லட்சம் கடத்தல் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தமிழக-கேரள எல்லையான புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரள மாநிலத்திற்கு சென்று வருகிறது தமிழகத்தின் எல்லையான புளியரையில் கேரளா செல்லும் வாகனங்களை சோதனை செய்ய வனத்துறை, வணிகவரி, காவல், போக்குவரத்து, வருவாய் துறை ஆகிய துறைகளின் சோதனைச் சாவடிகள் உள்ளன.
இத்தனை சோதனைச் சாவடிகளைத் தாண்டி அடிக்கடி இந்த வழியாக கொண்டு செல்லப்படும் எரிசாராயம், ரேஷன் அரிசி உள்ளிட்ட பல கடத்தல் பொருட்கள் புளியரையில் இருந்து 5 கிமீ தூரமுள்ள ஆரியன்காவு சோதனைச் சாவடியில் பிடிபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை கர்நாடகாவில் இருந்து ஒரு மினிவேன் கரும்பு ஏற்றிக் கொண்டு கேரளா நோக்கி வந்தது. அதனை கலால்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது கரும்பு லாரியில் கேரளா வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற சுமார் 6.5அடி உயரத்தில் 18 செம்மர கட்டைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கிடையே மதுரையை சேர்ந்த லாரி ஓட்டுனர் வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார். கிளீனர் குமார் என்பவர் மட்டும் பிடிபட்டார். செம்மர கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications