என்னை சீரழித்தவர்களை பிடித்துவிட்டார்களா? கற்பழிக்கப்பட்ட டெல்லி மாணவி கேள்வி
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் தன்னை கற்பழித்த கும்பலை கைது செய்துவிட்டார்களா என்று மருத்துவ படிப்பு மாணவி கேட்டுள்ளார்.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ படிப்பு படிக்கும் மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் 5 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அவரின் குடல் பகுதி பெரும் சேதமடைந்த நிலையில் அறுவை சிகி்ச்சை செய்து குடலில் 15 இன்ச் அளவுக்கு வெட்டி எடுத்தனர்.
அவரது நிலைமை தொடர்ந்து மோசமாகத் தான் உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கண் திறந்து பார்த்த அவர் தன்னை சீரழித்தவர்களை கைது செய்துவிட்டார்களா என்று கேட்டுள்ளார். அவரால் பேச முடியவில்லை என்பதால் பேப்பரில் எழுதிக் காட்டுகிறார்.
முன்னதாக அவர் தான் வாழ விரும்புவதாக எழுதிக் காட்டியுள்ளார். இதற்கிடையே அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications