4 இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு ..மதுரை உயர்நீதிமன்றக் கிளை
மதுரை: தமிழகத்தில் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 4 இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு அனுமதி அளித்துள்ளது மதுரை உயர்நீதிமன்றக் கிளை.
தமிழகத்தில் பல காலமாக நடந்து வரும் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லி்ககட்டு. ஆனால் இதற்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இருப்பினும் தற்போது அதற்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.
மாடு பிடி வீரர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு நடத்துவோருக்கும் கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்படுகின்றன.
இந்த நிலையில் வருகிற பொங்கல் திருநாளையொட்டி 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி மதுரையில் அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய இடங்களிலும் திருச்சியில் பெரியசூரியூர், அவரங்காடூர் ஆகிய 4 இடங்களில் மட்டும், கடந்தாண்டு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. இந்த பட்டியலில் பாரம்பரியாக ஜல்லிக்கட்டு நடந்து வரும் பாலமேடு சேர்க்கப்படவில்லை என்பதால் அந்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications