டெல்லி முதல்வரிடம் பெண்கள் முறையிட டயல் செய்ய வேண்டிய எண் 167
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் பெண்கள் முதல்வர் ஷீலா தீட்சித்திடம் உதவி கோருவதற்கான தனி ஹெல்ப்லைன் எண்ணாக 167 ஒதுக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தம்மிடம் பெண்கள் உதவி கோர தனி ஹெல்ப்லைன் ஒன்றை ஒதுக்கித் தருமாறு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்திடம் ஷீலா தீட்சித் கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் கேட்ட 2 மணி நேரத்தில் 167 என்ற தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளில் இதுபோன்ற மூன்று இலக்க ஹெல்ப்லைன் ஒதுக்கப்படுவது இதுவே முதல்முறை என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications