பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மெரீனாவில் போராட்டம்: நடிகைகள் சுகாசினி, பூர்ணிமா பங்கேற்பு
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு நடவடிக்கை கோரி சென்னை மெரீனா கடற்கரையில் திரைப்பட நடிகைகள் சுகாசினி, பூர்ணிமாக பாக்கியராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிறு இரவு மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து மாணவர்களும், பெண்கள் அமைப்பினரும் டெல்லியில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிவருகிறது. தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் பள்ளிச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதில் ஸ்ரீவைகுண்டம் சிறுமி படுகொலை செய்யப்பட்டாள்.

மெரீனாவில் போராட்டம்
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிறு மாலை, 4:00 மணிக்கு நடிகர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர், கற்பழிப்புக் குற்றங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பள்ளி மாணவி அழைப்பு
இந்த போராட்டத்திற்கு சென்னை எட்வர்ட் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து ஏராளமானோர் மெரீனா கடற்கரையில் திரண்டனர்.

சமூக வலைத்தளங்களில் அழைப்பு
இந்த போராட்டத்திற்கு ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடப்பட்டது. இதனையடுத்து 5000 பேர் வரை கடற்கரையில் திரண்டனர். இந்த போராட்டத்தில் நடிகைகள் சுகாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்கியராஜ், பாத்திமா பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

பேரணியாக மாறிய போராட்டம்
இதனையடுத்து போராட்டக்காரர்கள் அனைவரும் உழைப்பாளர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலங்கரை விளக்கம் வரை பேரணியாகச் சென்றனர்.அங்கு பல கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி முழக்கமிட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பதாகைகளை கைகளில் தாங்கியிருந்தனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications