பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மெரீனாவில் போராட்டம்: நடிகைகள் சுகாசினி, பூர்ணிமா பங்கேற்பு
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு நடவடிக்கை கோரி சென்னை மெரீனா கடற்கரையில் திரைப்பட நடிகைகள் சுகாசினி, பூர்ணிமாக பாக்கியராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிறு இரவு மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து மாணவர்களும், பெண்கள் அமைப்பினரும் டெல்லியில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிவருகிறது. தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் பள்ளிச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதில் ஸ்ரீவைகுண்டம் சிறுமி படுகொலை செய்யப்பட்டாள்.

மெரீனாவில் போராட்டம்
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிறு மாலை, 4:00 மணிக்கு நடிகர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர், கற்பழிப்புக் குற்றங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பள்ளி மாணவி அழைப்பு
இந்த போராட்டத்திற்கு சென்னை எட்வர்ட் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து ஏராளமானோர் மெரீனா கடற்கரையில் திரண்டனர்.

சமூக வலைத்தளங்களில் அழைப்பு
இந்த போராட்டத்திற்கு ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடப்பட்டது. இதனையடுத்து 5000 பேர் வரை கடற்கரையில் திரண்டனர். இந்த போராட்டத்தில் நடிகைகள் சுகாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்கியராஜ், பாத்திமா பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

பேரணியாக மாறிய போராட்டம்
இதனையடுத்து போராட்டக்காரர்கள் அனைவரும் உழைப்பாளர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலங்கரை விளக்கம் வரை பேரணியாகச் சென்றனர்.அங்கு பல கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி முழக்கமிட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பதாகைகளை கைகளில் தாங்கியிருந்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications