பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மெரீனாவில் போராட்டம்: நடிகைகள் சுகாசினி, பூர்ணிமா பங்கேற்பு
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு நடவடிக்கை கோரி சென்னை மெரீனா கடற்கரையில் திரைப்பட நடிகைகள் சுகாசினி, பூர்ணிமாக பாக்கியராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிறு இரவு மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து மாணவர்களும், பெண்கள் அமைப்பினரும் டெல்லியில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிவருகிறது. தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் பள்ளிச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதில் ஸ்ரீவைகுண்டம் சிறுமி படுகொலை செய்யப்பட்டாள்.

மெரீனாவில் போராட்டம்
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிறு மாலை, 4:00 மணிக்கு நடிகர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர், கற்பழிப்புக் குற்றங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பள்ளி மாணவி அழைப்பு
இந்த போராட்டத்திற்கு சென்னை எட்வர்ட் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து ஏராளமானோர் மெரீனா கடற்கரையில் திரண்டனர்.

சமூக வலைத்தளங்களில் அழைப்பு
இந்த போராட்டத்திற்கு ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடப்பட்டது. இதனையடுத்து 5000 பேர் வரை கடற்கரையில் திரண்டனர். இந்த போராட்டத்தில் நடிகைகள் சுகாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்கியராஜ், பாத்திமா பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

பேரணியாக மாறிய போராட்டம்
இதனையடுத்து போராட்டக்காரர்கள் அனைவரும் உழைப்பாளர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலங்கரை விளக்கம் வரை பேரணியாகச் சென்றனர்.அங்கு பல கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி முழக்கமிட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பதாகைகளை கைகளில் தாங்கியிருந்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications