திருவாரூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட 6 எஸ்.பிகள் டிரான்ஸ்பர்
சென்னை: திருவாரூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்பட 6 எஸ்.பிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக உள்துறை முதன்மை செயலாளர் ராஜகோபால் பிறப்பித்துள்ள உத்தரவில்,
பயிற்சி முடித்து விட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி காளிராஜ் மகேஸ்குமார், திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும், திருவாரூர் மாவட்ட போலீஸ் எஸ்பி எஸ்.சேவியர் தனராஜ் காஞ்சீபுரம் மாவட்ட எஸ்பியாகவும், காஞ்சீபுரம் மாவட்ட எஸ்பி எஸ்.மனோகரன் விழுப்புரம் மாவட்ட எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட எஸ்பி என்.பாஸ்கரன், மாநில மனித உரிமை கமிஷன் எஸ்பியாகவும், ஹைதராபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் (National Investigation Agency) எஸ்பி பணியாற்றிய வந்த எஸ்.மணி, சென்னையிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாகவும், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி பி.ஆர்.வெண்மதி டி.ஜி.பி. அலுவலக உதவி ஐ.ஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பில் எஸ்பி பணியாற்றிய வந்த எஸ்.மணியை தமிழக அரசு கட்டாயக் காத்திருப்பில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்த அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. இதை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தது முன்னாள் உள்துறை அமைச்சரும் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் பணியாற்றுவிட்டு வந்த மணியைத் தான் கட்டாயக் காத்திருப்பில் தமிழக அரசு வைத்திருந்தது.
காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடந்த சில தொடர் அரசியல் கொலைகளையடுத்து அந்த மாவட்ட எஸ்பி மனோகரனை விழுப்புரத்துக்கு மாற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications