ஆறு வயதிலேயே ‘தாதா’வாக மாறிய மகன்: அடித்தே கொன்ற சீனத் தந்தை!!
பீஜிங்: சீனாவில் ஆறுவயதிலேயே உடன் படிக்கும் மாணவர்களிடம் மிரட்டி பணம் பறித்த தாதா மகனை அவரது தந்தையே அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோங்காங் மாவட்டத்தை சேர்ந்தவர் செங் ஜங்பெங். இவருக்கு பிறந்த ஆசை மகன், ஜியாஹோ கொடூரகுணம் படைத்தவனாக இருந்துள்ளான்.
பள்ளிக்குச் சென்றால் மகன் திருந்தி விடுவான் என எதிர்பார்த்த தந்தை அவனை அருகிலுள்ள பள்ளியில் சேர்த்தார். ஆனால் ஜியாஹோ, வளர வளர அவனது கெடுகுணமும் சேர்ந்து வளரத் தொடங்கியது.
ஆறு வயதிலேயே அட்டூழியக்காரனாக மாறிவிட்ட மகனை, செங் ஜுங்பெங் பலமுறை அன்பாக புத்திமதி கூறியும், சிலமுறை கண்டித்தும், தண்டித்தும் அவன் திருந்தியபாடில்லை.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவரை சந்தித்த ஜியாஹோ-வின் ஆசிரியர், வகுப்பில் படிக்கும் சக மாணவர்களை, அடித்து, உதைத்து, மிரட்டி ஜியாஹோ பணம் பறிப்பதாகவும், அந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து உங்கள் மகனை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்து அவனை திருத்துங்கள் என செங் ஜங்பெங்-கிற்கு ஆசிரியர் அறிவுரையும் தந்துவிட்டுச் சென்றார்.
அன்றிரவு, மனைவி வேலைக்குச் சென்றிருந்த போது, தனிமையில் அமர்ந்திருந்த தந்தை, மகனை எப்படி திருத்துவது? என தீவிரமாக ஆலோசித்தார். சுவற்றில் மாட்டியிருந்த சவுக்கை எடுத்து, கை ஓயும் வரை சுமார் 1/2 மணி நேரம் விளாசிய அவர், இரவு 11 மணியளவில் மகனை படுக்க வைத்தார்.
இரவு 2 மணியளவில் திருந்தாத மகனை பாசத்தோடு பார்க்கச் சென்ற தந்தை திடுக்கிட்டார். காயங்களில் இருந்து வழிந்த ரத்தம், உடைகளை நனைத்த நிலையில் உடல் சில்லிட்ட நிலையில் இருந்த மகனை ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும், சிறுவன் ஜியாஹோ சிகிக்சை பலனின்றி, சில மணி நேரங்களில் உயிரிழந்தான்.
ஜென் சுங்பெங்-கை கைது செய்த லோங்காங் மாவட்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான் என்று நினைத்தேன். ஆனால் அவனை நானே அடித்துக் கொன்றுவிட்டேன். இனி நான் என்ன சொன்னாலும், அது அர்த்தமற்ற வார்த்தையாக தான் தோன்றும்' என கண்ணீர் மல்க கூறுகின்றார், செங் சுங்பெங்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications