யாருமே உதவவில்லை…. வேடிக்கை பார்த்த போலீஸ்… டெல்லி ஆண் நண்பரின் அதிர்ச்சி பேட்டி
டெல்லி: டெல்லியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்வாண நிலையில் சாலையில் உயிருக்கு போராடியபோது பொதுமக்கள் வேடிக்கைபார்த்தனர் என்று உயிரிழந்த மருத்துவமாணவியின் ஆண் நண்பர் கூறியுள்ளார். போலீசாரும் தங்களை உடனடியாக பாதுகாக்காமல் பேசிக்கொண்டிருந்தனர் என்றும் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் 16ம் தேதி இரவு ஒடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கியது. அப்போது அவருடன் இருந்த ஆண் நண்பரான மாணவரையும் சரமாரியாக தாக்கியது. அந்த மாணவி சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். பலத்த காயம் அடைந்த ஆண் நண்பர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரை தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டு ஒளிபரப்பியது.
அந்தப்பேட்டியில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். ஓடும் பேருந்தில் இருந்து தாங்கள் வெளியே தூக்கி எறியப்பட்ட பின்னர், சுமார் 25 நிமிடங்கள் சாலையில் உயிருக்குப் போராடியதாகவும், பொதுமக்கள் யாரும் உதவ முன்வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
அரைமணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இந்த வழக்கு எந்த காவல்நிலைய எல்லைக்குள் வரும் என ஆலோசனை நடத்தியதாகவும் இதில் 45 நிமிடங்கள் விரயமானதாகவும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சாலை ஓரத்தில் நிர்வாணமாக விழுந்துகிடந்த எங்களை காவல்துறையினர் வேடிக்கை பார்த்தனர். அப்போது, யாரோ ஒருவர் கொடுத்த துணியை வைத்து எனது தோழியின் உடலை மறைக்க முயன்றேன். ஆம்புலன்ஸ் வேன் எதுவும் வராத நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த எனது தோழியின் நிலை குறித்து மிகவும் கவலை அடைந்தேன். பின்னர் நானே எனது தோழியை போலீஸ் வேனில் தூக்கி வைத்தேன். காவல்துறையினர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நீண்டதூரம் பயணித்து சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் அலட்சியமே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணம் என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட அந்த மாணவர் இதுபோன்று பேட்டி அளித்துள்ளார்.
இந்தப் பேட்டியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications