கற்பழிப்பு புகாரைத் திரும்பப் பெற ரூ. 50,000 பேரம் பேசிய உ.பி. பஞ்சாயத்து

Subscribe to Oneindia Tamil

அலாகாபாத்: உ.பியில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மைனர் பெண் போலீஸில் புகார் கொடுக்காமல் இருப்பதற்காக அவருக்கு ரூ. 50,000 இழப்பீடு கொடுக்க முன்வந்துள்ளது ஒரு கிராமப் பஞ்சாயத்து. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பரிதாபத்துக்குரிய பெண்ணுக்கு வயது 13தான் ஆகிறது என்பதுதான் பெரும் சோகமான செய்தியாகும். பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள மாலி என்ற கிராமத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.

அங்கு 13 வயதான சிறுமியை கடத்தி மகாராஷ்டிராவுக்கக் கொண்டு சென்று பல நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக குந்தா போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தியபோது, தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்தான் இந்த பாலியல் பலாத்காரத்தை நடத்தியது என்று அப்பெண் கூறினார். மேலும் தன்னை துப்பாக்கி முனையில் கடத்தி்ச சென்றதாகவும் அவர் தெரிவித்தார். நாக்பூருக்குத் தன்னைக் கொண்டு சென்று பல நாட்கள் கற்பழித்ததாகவும் அவர் கூறினார்.

முதலில் இந்தப் புகாரை எடுக்க போலீஸார் மறுத்துள்ளனர். ஆனால் எஸ்.பி.யே நேரடியாகத் தலையிட்ட பின்னர்தான் புகாரைப் பதிவு செய்துள்ளனர் போலீஸார்.

இதற்கிடையே, அப்பெண் சார்ந்த கிராமப் பஞ்சாயத்தினர், பிரச்சினையை கமுக்கமாக முடித்துக் கொள்வதற்காக ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அதாவது பெண்ணின் குடும்பத்தார் மற்றும் கற்பழிப்பில் ஈடுபட்ட நபர் ஆகியோருடன் பேச்சுநடத்தி பெண் குடும்பத்தாருக்கு ரூ. 50,000 இழப்பீடு தருவதாகவும், புகாரை வாபஸ் பெறுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் அப்பெண் திருமண வயதை எட்டியதும், கற்பழித்த நபருக்கே கட்டி வைத்து விடலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இதை பெண்ணின் குடும்பத்தார் நிராகரித்து விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+