குடியரசு தினத்தன்று தற்கொலை செய்துகொள்ள அனுமதி கோரி பிரணாபிடம் 165 பேர் மனு
டெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக தங்களுக்கு வர வேண்டிய ஓய்வூதியம் வராத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 165 பேர் வரும் 26ம் தேதி தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவாத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த 165 முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக அரசிடம் இருந்து வர வேண்டிய ஓய்தியம் வரவில்லை. இதனால் அவர்கள் பசியும், பட்டினியுமாக உள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட அவர்கள் அனைவரும் சேர்ந்து ஜனாதிபதிக்கு ஒரு மனு எழுதி அதில் கையெழுத்துபோட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மனுவில், வரும் 25ம் தேதிக்குள் தங்கள் குறைகள் தீர்க்கப்படவில்லை என்றால் வரும் 26ம் தேதி தாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளி்ககுமாறு குறிப்பிட்டுள்ளனர்.
ஓய்வூதியம் கிடைக்காதவர்கள் கடந்த ஆண்டு பேரணி நடத்தியும் பலனில்லை. மேலும் இது குறித்து தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தான் பட்டினியாகக் கிடந்து இறப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications