வீட்டுவேலை செய்வது, கணவனைத் திருப்திபடுத்துவது தான் பெண்கள் வேலை: ஆர்எஸ்எஸ் தலைவர்
டெல்லி: பெண்கள் வீட்டு வேலை செய்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
மனைவி வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். கணவன் சம்பாதிப்பதுடன் மனைவியை பாதுகாக்க வேண்டும். இந்த உலகத்தில் திருமணம் என்னும் சமூக ஒப்பந்தம் உள்ளது. அதன்படி மனைவி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு கணவனை திருப்திபடுத்த வேண்டும். கணவன் மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அவளை பாதுகாக்க வேண்டும். மனைவி தனது கடமைகளை ஒழுங்காக செய்யாவிட்டால் கணவன் அவளை விட்டுப் பிரிகிறான். அதே போன்று கணவன் ஒப்பந்தப்படி நடக்கவில்லை என்றால் மனைவி அவனைப் பிரியலாம். அதன் பிறகு அவர்கள் வேறு புதிய ஒப்பந்தம் போடலாம்.
கற்பழிப்பு சம்பவங்கள் கிராமத்தில் அல்ல நகரங்களில் தான் நடக்கிறது என்றார்.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், பகவத்தின் கருத்தை நல்ல முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications