மு.க. அழகிரி பேட்டி- ஏமாந்த மதுரை பத்திரிகையாளர்கள்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் தம்மை சந்திக்க கருணாநிதி தவிர்த்துவிட்ட கோபத்துடன் மதுரை திரும்பினார் அழகிரி. இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து முக்கிய தகவல் தெரிவிக்கப் போகிறார் என்று அழைக்கப்பட்டது.
இதனால் இன்று காலை அழகிரி வீட்டு முன்பு 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். ஆனால் தம்மை சந்தித்த திமுக நிர்வாகிகளிடம் மட்டும் அழகிரி பேசினார். கடைசிவரை பத்திரிகையாளர்களை அவர் அழைக்கவில்லை.
இது குறித்து கூறிய அழகிரி, தாம் பத்திரிகையாளர்களை அழைக்கவே இல்லை என்று கூறியதால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.












Click it and Unblock the Notifications