இந்திராகாந்தி கொலையாளிக்கு மாவீரர் பட்டம்: அகாலி தளம் கவுரவம்

சத்வந்த் சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில், அவருடைய தந்தைக்கு போர் வீரர்கள் அணியும் அங்கியை வழங்கி, ‘மத நம்பிக்கைக்காக மரணத்தை தழுவிய மாவீரன்' பட்டத்தையும் வழங்கியுள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ம் தேதி, அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவரது மெய்காப்பாளர்களான சத்வந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 6ம் தேதி, திகார் சிறையில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர்
இந்த கொலையாளிகளின் 24ம் ஆண்டு நினைவு தினம், ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி சார்பில் நேற்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த விழாவில் அமிர்தசரஸ் ஷிரோமணி அகாலி தளம் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிம்ரன் ஜித் சிங், தல்கல்சா தலைவர் கன்வர்பால் சிங் உள்ளிட்ட சீக்கிய மதத்தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் கொலையாளிகள் நினைவாக பிராத்தனை செய்யப்பட்டது.
இந்த விழாவில் சத்வந்த் சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில், அவருடைய தந்தைக்கு போர் வீரர்கள் அணியும் அங்கியை சீக்கிய மதத்தலைவர் ஜியாணி குர்பச்சன் சிங் வழங்கி, ‘மத நம்பிக்கைக்காக மரணத்தை தழுவிய மாவீரன்' பட்டத்தையும் வழங்கினார்.
"பஞ்சாப் பொற்கோவில் மற்றும் அகாலி தக்த்தின் புனிதத்தன்மையை மதிக்காதவர்களை பழிவாங்குவதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த சத்வந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரை நினைத்து சீக்கிய சமுதாயம் பெருமைப்படுகின்றது" என்று தல்கல்சா தலைவர் கன்வர்பால் சிங், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர்களுடைய வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் இந்த நாளில் சீக்கிய சமுதாயம் அவர்களுக்கு நினைவாஞ்சலி செலுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications