அரசர்களின் அரசராக திகழ்பவர் நரேந்திர மோடி- அனில் அம்பானி புகழாரம்

குஜராத் மாநில தொழில் வளர்ச்சி தொடர்பாக இந்தியத் தொழிலதிபர்கள் சந்திப்பை நரேந்திர மோடி இன்று நடத்தியிருந்தார். இதில் குஜராத்தின் தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி, விசாலமான பார்வை கொண்ட தலைவர் நரேந்திர மோடி. குஜராத் மாநில அரசுடன் இணைந்து ரூ500 கோடியில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அவரது இளைய சகோதரர் அனில் அம்பானியோ இன்னும் ஒருபடி மேலேபோய், அரசர்களின் அரசராக திகழ்பவர் நரேந்திர மோடி என்று புகழாரம் சூட்டினார். மேலும் மகாபாரத அர்ச்சுனனைப் போல் தெளிவான சிந்தனை கொண்டவர் என்றும் பாராட்டியுள்ளார். உலகம் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கக் கூடிய மிகப்பெரிய காந்தமாக இருப்பவர் நரேந்திர மோடி என்றும் அனில் அம்பானி பாராட்டினார்.
வரும் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்று கூறப்படும் நிலையில் குஜராத்தியர்களான அம்பானி சகோதரர்கள் மோடியை புகழ்ந்து தள்ளியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications