பேருந்தின் ஸ்டியரிங் துண்டிப்பு! கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்த அரசுப் பேருந்து!
Subscribe to Oneindia Tamil
பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அரசுப் பேருந்தின் ஸ்டியரிங் துண்டிக்கப்பட்டு பேருந்து கால்வாயில் தலைகுப்புறக் கவிழ்ந்ததில் 25 பேர் படுகாயமடைந்தனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து ஊரணிபுரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது நடிவிக்கோட்டை என்ற இடத்தில் பேருந்தின் ஸ்டியரிங் ஆக்ஸில் துண்டாடி விழுந்தது.
இதனால் அந்தப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரக் கால்வாயில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்த 20 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications