இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக 2500 பாகிஸ்தான் தீவிரவாதிகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் 2500 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கக் கூடிய 42 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 25 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த முகாம்களில் சுமார் 2500 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று இந்தியாவுக்குள் ஊடுருவக் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களை ஊடுருவ வைப்பதற்காகவே எல்லையில் இந்திய நிலைகள் மீது தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.
இதனிடையே இந்தியாவின் கோரிக்கையை ஏற்று எல்லை மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஒப்புதல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications