உத்தரகண்டில் மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்ற தடை: முதல்வர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகண்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்ய அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் முதலில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையிலும் பின்னர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் 13 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து பெண்களின் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் மாலை 6 மணிக்கு மேல் பணியாற்ற தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநில பெண்களின் பாதுகாப்பு கருதியே முதல்வர் விஜய் பகுகுனா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+