அலகாபாத்தில் கும்பமேளா! 4 சங்கராச்சாரிகள் புறக்கணிப்பு! முதல் நாளில் 85 லட்சம் பேர் புனித நீராடல்!!

நிர்வாண சாதுக்கள் ஊர்வலம்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் மகா கும்பமேளா நடைபெறும். கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி கலக்கும் என்று நம்பப்படுகிற அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் இந்த ஆண்டின் மகா கும்பமேளா மகாசங்கராந்தி நாளான நேற்று அதிகாலை 5.15 மணிக்குத் தொடங்கியது. முதலில் நாகா சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாதுக்கள் ஊர்வலமாக வந்து புனித நீராடினர். அவர்கள் கைகளில் சூலாயுதங்கள், கோடாரிகள் என பயங்கர ஆயுதங்களை ஏந்தியபடி உறைய வைக்கும் குளிரில் நிர்வாணமாக நீராடினர். இவர்களுக்கு முன்னதாக சாதுக்களின் அமைப்பான 'அகாடாக்களின்' தலைவர்களான மஹாமண்டலேஸ்வர்கள் யானைகளிலும் குதிரைகளிலும் ஊர்வலமாக வந்தனர்.
சாதுக்களின் அமைப்பான அகாடாக்களிடையே யார் முதலில் புனித நீராடுவது என்ற மோதல் ஏற்பட்டு பல நூறு உயிர் இழப்புகள் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு அகாடாவுக்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. முதல் புனித நீராடல் மாலை 4.45 மனிக்கு நிறைவடைந்தது. முதல் நாளில் சுமார் 85 லட்சம் பேர் நீராடியிருப்பர் என்று நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1500 பேரை காணவில்லை
முதல் முறையாக இந்தப் புனித நீராடல் நிகழ்ச்சிகள் எல்.இ.டி. திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டன. பல கோடிப் பேர் கூடக் கூடிய திருவிழா என்பதால் நெரிசலோ அல்லது தீ விபத்தோ ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்பதற்காக பலத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் முதல் நாளில் மட்டும் சுமார் 1500 பேரைக் காணவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்களது கதி என்ன என்று தெரியவில்லை.
சங்கராச்சாரிகள் புறக்கணிப்பு
இதனிடையே அகாடாக்களுக்கு அலகாபாத் மகா கும்பமேளா நிர்வாகம் முன்னுரிமை கொடுப்பதாகவும் தங்களுக்கான வழக்கமான இடம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறி ஆதி சங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட 4 சங்கர மடங்களின் சங்கராச்சாரிகளும் கும்பமேளாவையே புறக்கணித்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications